அண்மையில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, இரா.சம்பந்தனுடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து கோத்தபாய கருத்து தெரிவித்துள்ளார். Gotabaya Rajapaksa TNA Sambanthan Meeting Details
ஊடக சந்திப்பு ஒன்றில் குறித்த சந்திப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய,
“தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பாக இரா.சம்பந்தனிடம், அவரது கருத்தை கேட்டேன்.
அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாடாளுமன்றம் ஒருமனதாக இணங்கியுள்ளது. எனவே, அதனைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
அத்துடன், அரசியலமைப்பு வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சம்பந்தன் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் மகிந்த ராஜபக்ச தரப்பு நடத்திய இந்த கலந்துரையாடல் நடப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்