பிரான்ஸில், அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துகளில் சிறுவர்கள் பலி!

0
357
France children killed subsequent accidents

சனிக்கிழமை இரவு A9 வீதியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பகுதியில் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், மிக நீண்ட போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தது. France children killed subsequent accidents

ஒரு விபத்து இரவு 11.49 மணிக்கு Montpellier-Orange நகரங்களை ஊடறுக்கும் சாலையில் Roquemaure நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனது.

இவ்விபத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் காரிற்குள் பயணித்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு SAMU மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மோசமாக காயமடைந்த சிலரை உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்று ஒன்றரை மணிநேரத்தில், de Tavel நகரில் இரண்டாவது தடவையாக மீண்டும் விபத்து ஏற்பட்டது. பல கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி மிக கோரமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு மீட்புப்பணிக்காக 13 உலங்குவானூர்திகள், 4 நோயாளர்காவு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தமாக இரு விபத்துக்களிலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

tags :- France children killed subsequent accidents

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்