ஒன்ராறியோவிலுள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். serious cases treatment Ontario
குறித்த விபத்தானது நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை கூறியுள்ளனர். இரு tractor-trailers ஒன்றோடு ஒன்று மோதியதுடன், அருகிலுள்ள வேறு வாகனங்களுடனும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது 40 வயதான ஒரு நபர் 25 நிமிடங்கள் வாகனத்தால் இழுத்து செல்லப்பட்டிருந்ததுடன், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ் விபத்தில் படுகாயமடைந்த 2 ஆவது மற்றும் 3 ஆவது நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.
குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags:- serious cases treatment Ontario
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.