ஒன்ராறியோவில் ஏற்பட்ட கோர விபத்தால் மூவர் தீவிர சிகிச்சையில்!

0
320
serious cases treatment Ontario

ஒன்ராறியோவிலுள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். serious cases treatment Ontario

குறித்த விபத்தானது நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை கூறியுள்ளனர். இரு tractor-trailers ஒன்றோடு ஒன்று மோதியதுடன், அருகிலுள்ள வேறு வாகனங்களுடனும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது 40 வயதான ஒரு நபர் 25 நிமிடங்கள் வாகனத்தால் இழுத்து செல்லப்பட்டிருந்ததுடன், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவ் விபத்தில் படுகாயமடைந்த 2 ஆவது மற்றும் 3 ஆவது நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.

குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags:- serious cases treatment Ontario

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்