நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என கூறியமை தொடர்பில் அவரின் கட்சி பலவழிகளில் ஆராய்ந்து வருகின்றது. UNP Discussing Vijayakala LTTE Statement Issue Final Decision 20th
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரின் கருத்துக்களின் படி,
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படவுள்ளது.
விஜயகலா தரப்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளது.
விஜயகால மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் பலர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்ற போதிலும், விஜயகலா அரசியலமைப்பை மீறும் வகையில் கருத்து வெளியிட்டாரா என்பது தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்