குருநாகல் கல்கமுவில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக படுத்திருந்த நபர் சிக்கினார்!

0
1453

வீடொன்றுக்குள் புகுந்து ஆணுறைப்பை வெளியே காட்டியவாறு படுத்திருந்த நபரொருவரை கல்கமுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Man arrested Abuse

இதன்போது குடிபோதையில் இருந்த அந்நபர் 26 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளரான பெண், தனது பிள்ளைகளுடன் நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அங்கு குறித்த நபர் படுத்திருப்பதைக் கண்டு பதறியுள்ளார்.

அவர் படுத்திருந்த நிலை கண்டு அப்பெண்ணின் பிள்ளைகளும் பயந்துள்ளனர்.

பின்னர் அப்பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கைதுசெய்த பொலிஸார் கல்கமுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பொலிஸார் உத்தரவிட்டுள்ளார்.