யாழில் தொடரும் பதற்றம் : இரு சகோதரர்கள் படுகாயம்

0
526

 

யாழ். அரியாலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் படுகாயமடைந்துள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். (jaffna ariyalai sword attack)

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(06) இரவு அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் சரமாரியாக வாள்களால் மோதிக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.சிறுப்பிட்டியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை வாள்களுடன் அத்துமீறி உள்நுழைந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை உடைத்துச் சேதமாக்கியுள்ளதுடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna ariyalai sword attack,jaffna ariyalai sword attack,jaffna ariyalai sword attack,