ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலை விசமிகளால் உடைப்பு

0
850
Arumuga navalar statue damage vavuniya

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. (Arumuga navalar statue damage vavuniya)

குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து, மது அருந்துவதாகவும் ஊர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக, ஆறுமுகநாவலரின் சிலை உடைத்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Arumuga navalar statue damage vavuniya