“நல்லது செய்கிறேன்” என்று கூறி முதியவருக்கு தீ மூட்டிய கள்ளக்காதலி!

0
405
Kaluthurai Woman Arrested Set Fire Illegal 70 Years Old Boy Friend

‘இரு உனக்கு நான் நல்லது ஒன்றைச் செய்கிறேன்’ எனக் கூறி 70 வயதான நபர் ஒருவர் மீது, அவரது கள்ளக் காதலி மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Kaluthurai Woman Arrested Set Fire Illegal 70 Years Old Boy Friend

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த நபரின் 56 வயதான கள்ளக் காதலியை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற கல்பாத பிரதேசத்தை சேர்ந்த நபர் களுத்துறை நாகொடை வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இருவரும் சிறு வியாபார நிலையம் ஒன்றை நடத்தியுள்ளதோடு, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி பகல் 2 மணியளவில் தனது கள்ளக் காதலியைத் திட்டியதால் ஆத்திரமடைந்த அவர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளதாக காயமடைந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபரை களுத்துறை நீதவான் முன் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites