பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சருடன் பாராளுமன்றத்தில் இருப்பது குறித்து வெட்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.(unp back seat parliament members vijayakala maheswaran)
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் அவர்கள், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முயற்சிப்பதாகவும் விமர்சித்தனர்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துடன் நாம் இணங்கவில்லை. அவருடைய கருத்தைக் கண்டிப்பதுடன், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே, துஷார இந்துநில் அமரசேகர மற்றும் சமிந்த விஜயசிறி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
இராஜாங்க அமைச்சருடைய கருத்து மோசமானது. அதனுடன் நாம் இணங்கவில்லை. அவருடன் பாராளுமன்றத்தில் இருப்பதையிட்டு வெட்கம் அடைவதாக துஷார இந்து நில் எம்பி கூறினார்.
அவரை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்கவேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்வைத்த கருத்துத் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைமைத்துவத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
அதேநேரம், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையால் ஆட்டம் கண்டுபோயிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு தற்பொழுது இறைச்சித் துண்டு கிடைத்ததுபோல விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் ஊடகங்களுக்கு நாடகங்களை அரங்கேற்றி தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கு முயற்சிப்பதாக ஹேஷான் விதானகே எம்.பி குற்றஞ்சாட்டினார்.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பாக பிரசன்ன ரணவீர செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்து ஊடக கண்காட்சிகளை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும்போது இவ்வாறு நடப்பவர்கள் நிர்வாக பலம் கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும் துஷார இந்துநில் எம்.பி கேள்வியெழுப்பினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:unp back seat parliament members vijayakala maheswaran,unp back seat parliament members vijayakala maheswaran,unp back seat parliament members vijayakala maheswaran,,