(court ordered arrest involved recent killing minor Kilinochchi)
கிளிநொச்சியில் அண்மையில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (21) பகல் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, அங்கிருந்த இளைஞர்கள் சிறுத்தையை அடித்து கொலை செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக தகவல் வெளியிடப்பட்டது.
இதேவேளை, சிறுத்தை மரணமடைந்த பின்னர் சிறுத்தையை கொலை செய்தவர்கள் அதனுடன் புகைப்படங்களையும், காணொளிகளும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்தநிலையில், குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு நேற்று நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
(court ordered arrest involved recent killing minor Kilinochchi)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் ஜனாதிபதியாக சர்வாதிகாரி ஹிட்லர் வேண்டாம் – அஜித் பி பெரேரா
- நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்
- அத்துமீறிய கடலட்டை பிடிப்பவர்கள் தொடர்பில் துரித தீர்வு வேண்டும்
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- அம்பேவெல பகுதியில் விபத்து – லொறி – முச்சக்கரவண்டி மோதி இருவர் படுகாயம்
- உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – தினேஷின் கேள்விக்கு ரிஷாட் பதில்!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்