தாய் அல்லது தந்தையை இழந்த 765 பிள்ளைகள் கிளிநொச்சியில்

0
390
765 children lost mother, father Kilinochchi

யுத்தத்திற்குப் பின்னர் கிளிநொச்சியில் மீள்குடியேறுவதற்கு சென்ற பொதுமக்களில் தாய் அல்லது தகப்பனை இழந்த 765 பிள்ளைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (765 children lost mother, father Kilinochchi)

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் உள்ள அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தாய்மார்களை இழந்த 387 பிள்ளைகளும் தகப்பன்மாரை இழந்த 378 சிறுவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த அறிக்கை கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ‘சிறுவர்களைப் காப்போம்’ தேசிய வேலைத் திட்டத்தின்படி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் தடுப்பு முகாங்களை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றிற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சிறுவர் இல்லங்களின் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அநேகமாக யுத்தத்தின் போது, இந்த சிறுவர்கள் தங்களின் தாய் அல்லது தகப்பனை இழந்துள்ளதனால், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக விசேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tags :- 765 children lost mother, father Kilinochchi

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites