மதுபானத்தை தடை செய்யும் முடிவில் பிரான்ஸ் அரசு!

0
556
majority French people favour raising alcohol price

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் மதுபானத்தின் விலையை உயர்த்துவதற்கு ஆதரவாக உள்ளனர் என ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. majority French people favour raising alcohol price

cancer-fighting group La Ligue National Contre Le Cancer (LLNCC) இனால் வெளியிடப்பட்ட புதிய ஆய்வினால் 54 % ஆனவர்கள் மதுபானத்தின் விலையை உயர்த்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதார காரணங்களுக்காக பொது நுகர்வை குறைக்க ஆதரவு தெரிவிக்கின்றமை தெரியவந்துள்ளது.

அதே ஆய்வில், 58% வீதமானோர் மதுவுடன் தொடர்புடைய தயாரிப்புகளிற்கு வரியை கூட்ட ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 18-24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மது விலைகளை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். அதில் 92 சதவிகிதம் ஆனவர்கள் மது விலைகளை உயர்த்த ஆதரவாகவும், 6% ஆனோர் அதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அதேபோல், 81 சதவிகித இளைஞர்கள் “மது அருந்துதலினால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான வாசகங்களை அச்சிடுவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாகவும், அதற்கு எதிராக 18% ஆனோர் வாக்களித்திருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கான (71%) ஆனவர்கள் இணையம் உட்பட மதுபான விளம்பரம் மீதான முழுமையான தடையை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். அதற்கு எதிராக 28% ஆனவர்கள் வாக்களித்துள்ளனர்.

tags :-  majority French people favour raising alcohol price

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**