பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் மதுபானத்தின் விலையை உயர்த்துவதற்கு ஆதரவாக உள்ளனர் என ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. majority French people favour raising alcohol price
cancer-fighting group La Ligue National Contre Le Cancer (LLNCC) இனால் வெளியிடப்பட்ட புதிய ஆய்வினால் 54 % ஆனவர்கள் மதுபானத்தின் விலையை உயர்த்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதார காரணங்களுக்காக பொது நுகர்வை குறைக்க ஆதரவு தெரிவிக்கின்றமை தெரியவந்துள்ளது.
அதே ஆய்வில், 58% வீதமானோர் மதுவுடன் தொடர்புடைய தயாரிப்புகளிற்கு வரியை கூட்ட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 18-24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மது விலைகளை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். அதில் 92 சதவிகிதம் ஆனவர்கள் மது விலைகளை உயர்த்த ஆதரவாகவும், 6% ஆனோர் அதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அதேபோல், 81 சதவிகித இளைஞர்கள் “மது அருந்துதலினால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது தொடர்பான வாசகங்களை அச்சிடுவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாகவும், அதற்கு எதிராக 18% ஆனோர் வாக்களித்திருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கான (71%) ஆனவர்கள் இணையம் உட்பட மதுபான விளம்பரம் மீதான முழுமையான தடையை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். அதற்கு எதிராக 28% ஆனவர்கள் வாக்களித்துள்ளனர்.
tags :- majority French people favour raising alcohol price
**Most Related Tamil News**
- பிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்!
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!