Home Uncategorized அராலியில் ஆணின் சடலம் மீட்பு; கொலை என சந்தேகம்

அராலியில் ஆணின் சடலம் மீட்பு; கொலை என சந்தேகம்

0
அராலியில் ஆணின் சடலம் மீட்பு; கொலை என சந்தேகம்

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. (Man’s body recovered Arali Jaffna)

அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி என்ற 71 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கிய நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்த போது, இவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அத்துடன், சடலத்திற்கு அருகில் கயிறு போன்றன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வட்டுக்கோட்டை பொரிஸார், இதுதொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Man’s body recovered Arali Jaffna