காதலியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்று காதலியுடன் அறையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, காதலியின் தந்தை பிடித்து ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது வீட்டுக்குள் திருட்டுத்தனமாக உள் நுழைந்து புதல்வியின் அறையில் தங்கி இருந்ததாகக் கூறி கான்ஸ்டபிளை, யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காதலன் பிணையில் விடுதலை
இந்நிலையில் , கைது செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
அதெசமயம் காதலி 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பித்ததாகவும் இல்லாவிட்டால் அவர் தற்போது சிறையில் இருந்திருப்பார் என்று உயிர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.