பசுவை கொன்று வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியினை வீசிய நபர்கள்! கிளிநொச்சியில் சம்பவம்

0
503

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் ,மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்ட பசுவை , இறைச்சிக்காக கொன்று அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியினை எடுத்து வீசி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றை களவாடி ,அதன் வயிற்றை கிழித்து,கன்றுக்குட்டியை வீசி விட்டு,மிகுதியை இறைச்சியாக்கிய சந்தேகத்தில் 4 பேர் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நான்கு பேரையும் கால் நடையின் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பசுவைக் கொன்று வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியை வீசிய நால்வர்! | The Four Who Killed The Cow And Threw Calf Stomach

அத்துடன் சந்தேக நபர் களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.taatastransport.com/