நியூயார்க் நகரின் மேன்ஹட்டன் (Manhattan) வட்டாரத்தில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மலர்த் திருவிழா பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல பூக்கலை வடிவமைப்பாளர் லூவிஸ் மில்லர்(Lewis Miller) 4 சாலை சமிக்ஞைகளைப் பூக்களால் அலங்கரித்துள்ளார்.
அந்த வட்டாரத்தில் திரும்பும் திசையெல்லாம் மக்கள் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உணரவேண்டும் என லூவிஸ் மில்லர்(Lewis Miller) கூறினார். பூக்களுக்கு உணர்வுகளை மாற்றியமைக்கும் தன்மை இருப்பதை தமது சிறு வயதிலேயே தெரிந்துகொண்டதாக வடிவமைப்பாளர் கூறினார்.
இருப்பினும் அந்த உணர்வை அனுபவிக்க சிறிது காலம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கட்டடங்கள் மட்டுமே உயர்ந்து நிற்கும் நியூயார்க் நகரில் இயற்கையில் மூழ்கும் அனுபவத்தை இத் திருவிழா தருகிறது.
மேலும் மலர்த் திருவிழா முடிந்தவுடன் கழிவுகளை மறுபயனீடு செய்து நகரின் பசுமைப் பகுதிகளில் பயன்படுத்தவும் நகரில் திட்டம் உள்ளது.