மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் உள்ள சுரங்கங்களில் தங்கியிருந்த வீரர்கள் 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 800 பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷியா கூறுகிறது.
இதையொட்டி ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 771 உக்ரைன் படை வீரர்கள் சரண் அடைந்துள்ளனர். கடந்த 16-ந் தேதியில் இருந்து 1,730 பேர் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். சரண் அடைந்துள்ள வீரர்களில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.