கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்

0
509

கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமாகிற நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷியா கூறி உள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் தாக்குதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கு டான்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றின் அபாயகரமான பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2,004 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

இந்த தகவலை ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.