(TAMIL NEWS mahida anura kumara wavs hand signs)
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) இடம்பெற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் பிரசன்னமாகியிருந்தார். அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயகவை பார்த்து கையசைத்து சைகை காட்டினார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ காட்டிய சைகை விளங்காத வகையில் அனுரகுமார தனது சைகையால் தெரிவித்தார். இதனை அடுத்து ஆசனத்தில் இருந்து எழுந்த மஹிந்த ராஜபக்ஷ அனுரகுமார இருக்கும் இடத்தை நோக்கி வந்தபோது அனுரகுமார உடனடியாக மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி விரைந்தார். இதனையடுத்து இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ:- அரசாங்கத்தை எதிர்த்து பொது எதிரணியாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களில் இதற்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்க முடியுமா, நாம் ஒன்றிணைந்து செயற்படுவோமா என அனுரகுமார திசாநாயக எம்.பியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் இதற்கு பதில் கூறிய அனுரகுமார :- நீங்கள் இப்போது முன்னெடுக்கும் போராட்டத்தை நடத்துங்கள், இதில் எம்மால் கலந்துகொள்ள முடியாது. எனினும் அடுத்து வரும் போராட்டங்களில் பார்க்கலாம் எனக் கூறினார்.
(TAMIL NEWS mahida anura kumara wavs hand signs)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி