காத்தான்குடியில் இயங்கும் ஆயுதக் குழுக்களால் பெரும் ஆபத்து நேரும் – பொதுபலசேனா எச்சரிக்கை

0
378
BBS warned serious danger Sri Lanka armed groups operating Kattankudi

(BBS warned serious danger Sri Lanka armed groups operating Kattankudi)

காத்தான்குடியில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் ஆயுதக் குழுக்களால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்ட போதும், அவர்கள் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளார்.

இதேவேளை, ஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாகவும் அவர் டிலாந்த வித்தானகே குற்றம்சுமத்தியுள்ளார்.

(BBS warned serious danger Sri Lanka armed groups operating Kattankudi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites