(Minister Faizar Mustafa must resign over new bill passed parliament)
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலம் தோல்வியடைந்தமை குறித்து உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (26) ஹட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடத்தினாலும் பரவாயில்லை. அதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது எங்களின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவோம் என்பதனை நான் உறுதியாக கூறுகிறேன்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சார்ந்த நாங்கள் பிழையான விடயங்களை பிழையெனவும், சரியான விடயங்களை சரியெனவும் கூறுவோம். ஆகையால் தான் பிழையான விடயங்களுக்கு நாங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.
இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இடம் பெறவிருக்கின்ற ஆர்பாட்டத்திற்கு மலையக மக்களை கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாக இந்த ஊடக சந்திப்பின் போது அவர் கோரக்கைவிடுத்தார்.
(Minister Faizar Mustafa must resign over new bill passed parliament)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்