சமையல் எரிவாயுக்களின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமுமில்லை – ரஞ்சித் அசோக்க

0
384
government not make decision increase prices all domestic gas

(government not make decision increase prices all domestic gas)

சகல சமையல் எரிவாயுக்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இருந்தபோதும், அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார்.

எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில், சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(government not make decision increase prices all domestic gas)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites