தமிழக மீனவ வளத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

0
292
India Tamil Nadu fisher men association group diced visit srilnaka

தமிழக மீனவ வளத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். India Tamil Nadu fisher men association group diced visit srilnaka

இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கே தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த ஹிந்து இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் 168 படகுகள் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பல படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தீர்மானித்ததையடுத்தே, குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் அதிகாரிகளை சந்தித்து படகுகளின் சேத விவரங்களைக் கணக்கிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
India Tamil Nadu fisher men association group diced visit srilnaka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites