தோட்டப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுக் காணும் வகையில், இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் மொழி மூலமான ஆசிரிய உதவியாளர்களை, அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சியின் நிறைவில், இலங்கை ஆசிரியர் சேவையில் 3-1 தரத்துக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கம் ,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.(sri lanka teachers union)
ஆசிரிய உதவியாளர்கள் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி, தமது பயிற்சிகளை நிறைவுச் செய்துள்ளனர். எனினும் அதற்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லையென,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் சொற்ப சம்பளத்துக்கு அவர்களது சேவை சுரண்டப்படுவதாக குறிப்பிடும் அச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இந்த வியடம் தொடர்பில் கல்வி அமைச்சர் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் குறித்த காலத்தில் இதற்கு தீர்வு வழங்காவிட்டால், ஆசிரிய உதவியாளர்களுடன் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sri lanka teachers union,