ஆசிரிய உதவியாளர்கள் : இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு விடுத்துள்ள கோரிக்கை

0
410
sri lanka teachers union

தோட்டப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுக் காணும் வகையில், இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் மொழி மூலமான ஆசிரிய உதவியாளர்களை, அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சியின் நிறைவில், இலங்கை ஆசிரியர் சேவையில் 3-1 தரத்துக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கம் ,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.(sri lanka teachers union)

ஆசிரிய உதவியாளர்கள் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி, தமது பயிற்சிகளை நிறைவுச் செய்துள்ளனர். எனினும் அதற்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லையென,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் சொற்ப சம்பளத்துக்கு அவர்களது சேவை சுரண்டப்படுவதாக குறிப்பிடும் அச் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இந்த வியடம் தொடர்பில் கல்வி அமைச்சர் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் குறித்த காலத்தில் இதற்கு தீர்வு வழங்காவிட்டால், ஆசிரிய உதவியாளர்களுடன் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sri lanka teachers union,