பாலஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் “மாரி-2” படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அடுத்த பாகமும் உருவாக்கப்படும் என தனுஷ் ட்விட்டரில் சூசகமாக அறிவித்துள்ளார். Dhanush act Maari 3 movie twitter announced tamil news
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
2015-ஆம் ஆண்டு பாலஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் தனுஷூடன் சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். வேகமான நடை பெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.
இதுகுறித்து தனஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.. :-
“மாரி 2-ல் மீண்டும் மாரியாக நடித்தில் மிக்க மகிழ்ச்சி, மீண்டும் மாரியாக நடிக்க மிக ஆவலாக உள்ளேன்” என பதிவிட்டு படத்தின் இயக்குனர் மற்றும் படகுழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ் முன்றாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறியிருப்பது, ”மாரி-3” பாகம் உருவாகும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)
* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!
* இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!
* பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!
* காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!
* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!
* ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!