(Chandima Weerakody said planned sign visa irrelevant agreement Thailand)
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு விசா அவசியமற்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
இந்த உடன்படிக்கை மூலம் தாய்லாந்தில் இருக்கும் எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும். இதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார்? அதனூடாக மகிழ்ச்சியடையப் போவது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
(Chandima Weerakody said planned sign visa irrelevant agreement Thailand)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்
- மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்
- நாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்