1989ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலத்தில் பலாலி வீதியில் ஆலடிச் சந்தியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவடைந்த 4 புலிகள் மற்றும் 6 பொது மக்களின் நினைவாக 1990ஆம் ஆண்டு கிராம மக்களால் ஆலடிச் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அடித்துநொறுக்கப்பட்டுள்ளது. Jaffna Palaly Road IPKF LTTE Memorial Statue Destroyed Tamil News
கடந்தகாலப் போராலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் அழிவடையாது, அழிக்கப்படாது பாதுகாக்கபப்பட்ட நினைவுத் தூபி 28 ஆண்டுகளின் பின்னர் நேற்று அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
2010ஆம் ஆண்டுவரை இராணுவக் காவலரண் இருந்த காலத்திலும் அந்த நினைவுத் தூபி முழுமையாகக் காணப்பட்டது. 2010ஆம் ஆண்டு பலாலி வீதியின் அகலிப்புப் பணிகளின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அந்தத் தூபியை அடியோடு கிழப்பி மறுகரையில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்தத் தூபி நொறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேரர்ந்தவர்களே இந்த நாசகார வேலையைச் செய்தனர் என்று தெரிவிக்கப்பகிறது. சம்பவம் தொடர்பில் மக்கள் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!