புதிய அரசமைப்பை , சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட மகிந்த ராஜபக்ச. மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக பயன்படுத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். TNA Sambanthan Advices Former President Mahinda Rajapaksa Tamil News
இது தொடர்பில் அவர் கூறியதாவது,
ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக புதிய அரசமைப்பைப் பயன்படுத்தவேண்டாம் என்று மகிந்த ராஜபக்சவிடம் நேரில் கூறினேன்.
இந்த வேண்டு கோளை முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையிலான பொது எதிரணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன்.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்சவும், அவரின் பொது எதிரணியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும். நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குச் செல்வதை தடுப்பதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காணவேண்டும். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி முழுமையான ஆதரவைத் தரவேண்டும். போலிப் பரப்புரைகளையும் இனவாதகக் கருத்துக்களையும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற உரைகளையும் அவர்கள் கைவிடவேண்டும்.
மேலும் நியாயமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நிதானமான போக்கை கடைப்பிடிக்கவேண்டும் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையிலான பொது எதிரணியிடம் நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!