சிறுவனின் உயிர் தியாகத்தால் கிராம மக்களுக்கு கிடைத்த நன்மை : வவுனியாவில் மனதை உருக்கும் சம்பவம்

0
1210
vavuniya puliyankulam accident update

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியுடன் இ.போ.சபை பேரூந்து மோதியதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் சாரதி மற்றும் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.(vavuniya puliyankulam accident update,Tamilnews)

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் அளவுக்கதிகமான சிறார்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலைச் சிறுவன் உயிரிழந்திருந்தார்.

புளியங்குளம் லைக்கா ஞானம் கிராமம் பகுதியிலிருந்து போக்குவரத்து வசதியின்மையால் இவ்வாறு அளவுகதிகமான மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தமை தெரியவந்தது.

இந்த நிலையில் தமது கிராமத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கும் பட்சத்தில் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலை சென்று வர முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக வன்னிப்பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டதை அடுத்து, பிரதி பொலிஸ் மா அதிபர் இ,போ.ச தலைவர் ரமன் சிறிவர்தனவுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தமைக்கமைவாக இன்றில் இருந்து சிறப்புப் பாடசாலை சேவை அக்கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vavuniya puliyankulam accident update,vavuniya puliyankulam accident update,vavuniya puliyankulam accident update,