(longest serving TNA next Provincial Council Chief Minister)
தமிழரசு கட்சியில் நீண்டகாலம் சேவையாற்றியவரையே அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட கிளை தீர்மானித்திருப்பதாக கட்சியின் இணை பொது செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று அவை தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை கூடி அடுத்துவரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என்பது தொடர்பில் ஆராய்ந்தது.
இதன்போது கட்சியின் யாப்புக்கு அமைவாக நீண்டகாலம் தமிழரசு கட்சியில் சேவையாற்றிய ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறினார்.
இதேவேளை, நீண்டகாலம் கட்சியில் சேவையாற்றிய ஒருவர் யார்? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சராக நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள செய்திகள் குறித்தும் கேட்டபோது
நீண்டகாலம் பணியாற்றியவர் யார்? என்பது இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கூறினார்.
(longest serving TNA next Provincial Council Chief Minister)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பிரபலம் தேடும் முயற்சியில் சிலர் என்மீது வழக்கு தொடுக்கின்றனர் – மணிவண்ணன்
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- தமிழீழ புலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது
- ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கி.மீ. தூக்கிக்கொண்டு ஓடிய நபர் – நண்பகலில் கொடூரம்
- தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் – முதல்வர் உறுதி
- படுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்
- பழனி கோவிலில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக