ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கி.மீ. தூக்கிக்கொண்டு ஓடிய நபர் – நண்பகலில் கொடூரம்

0
491
jharkhand man killed woman teacher ran 5 kilometers chopped head

(jharkhand man killed woman teacher ran 5 kilometers chopped head)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியை ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்த சந்தேக நபர், அந்த தலையை 5 கி.மீ. தூரத்திற்கு தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா – கர்ஸ்வான் மாவட்டத்தில் இயங்கி வரும் கப்ரசாய் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சுக்ரா ஹெசா (30) என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்த சந்தேகநபர் நபர், திடீரென ஆசிரியை சுக்ராவை தரதரவென இழுத்து சென்றுள்ளார்.

தனது வீடு வரை இழுத்துச்சென்ற அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஆசிரியையின் தலையை மட்டும் தனியாக துண்டித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். உடனே அந்த நபர் சுக்ராவின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், வனப்பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயரை ஹரி ஹெம்ப்ராம் (26) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

பொலிஸாரின் பிடியில் இருந்த ஹரி மீது, பொதுமக்கள் சிலர் பலமாக தாக்குதல் நடத்தியதால், படுகாயமடைந்த ஹரி தற்போது ஜாம்ஷெட்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(jharkhand man killed woman teacher ran 5 kilometers chopped head)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites