(tamilnews jaffna municipal council manivannan high court case)
தான் மாநகரசபை உறுப்பினராக இருப்பதை விருப்பாதவா்கள் அல்லது மாநகரசபை உறுப்பினராக இருப்பதால் தமக்கு பிரச்சினை ஏற்படும் என நினைப்பவா்கள் சிலரே தனக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் என்று யாழ்.மாநகரசபை உறுப்பினா் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கை யாழ்ப்பாண நகரை அண்டிய கிராமத்தில் உள்ள ஒருவா் தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு அப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது அறிந்துள்ளாரா என எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது.
மேலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடா்பாக எனக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் கிடைக்கப்பெறவில்லை.
ஆயினும் எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகால நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே மணிவண்ணன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில், ராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனின் விடயம் தொடா்பாக..
தமிழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் பாலியல் வன்புணர்வுகள், வாள்வெட்டுக்கள், சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற வன்செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவா்களுக்கு அது தெரியும்.
ஆனால் இன்று அவ்வாறான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தனக்குள் இருக்கும் ஆதங்கத்தைக் கூறியிருக்கலாம். காரணம் அவா் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த ஒருவா்.
ஆனால் கொழும்பில் அல்லது தெற்கில் உள்ளவா்கள் அதனை பாரதுாரமாக பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
(tamilnews jaffna municipal council manivannan high court case)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக