(Chinese gov immediately release wife social activist Nobel Prize UN)
நோபல் பரிசை பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை முகாமை வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்த நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நோர்வேக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு அண்மையிலேயே சீரடைந்தது.
இதனிடையே, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோ, 13-7-2017 அன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது மரணத்துக்கு உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களில் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மரணத்துக்கு பின்னர் லியு சியாபோவின் மனைவி லியு கிசியா-வை சீன அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவரது கைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், சந்திக்க விரும்பும் நபர்களை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால், லியு கிசியா மிகுந்த மன உளைச்சலுக்கு இலக்காகி, உடல்நிலை பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டு வருவதாகவும் சில சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தனிமையான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் மன அழுத்தத்துடன் சேர்த்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள லியு கிசியாவை வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறும் வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு நிபுணர்கள் சீன அரசை இன்று வலியுறுத்தியுள்ளனர்.
(Chinese gov immediately release wife social activist Nobel Prize UN)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பிரபலம் தேடும் முயற்சியில் சிலர் என்மீது வழக்கு தொடுக்கின்றனர் – மணிவண்ணன்
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- தமிழீழ புலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது
- ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கி.மீ. தூக்கிக்கொண்டு ஓடிய நபர் – நண்பகலில் கொடூரம்
- தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் – முதல்வர் உறுதி
- படுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்
- பழனி கோவிலில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக