இலங்கையில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். (china construction sri lanka)
”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், இலங்கையில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், இலங்கையின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம்.
இலங்கையின் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து குறைக்கப்பட்டு விட்டது.
அத்துடன், எந்தவொரு நாட்டினதும்,வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, ஒரு இலங்கை பங்காளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
tags :- china construction sri lanka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!