பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 10 நபர்கள், சனிக்கிழமை (ஜூன் 23) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் (ஜூன் 24) நாடு முழுவதிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. June 23 night raid 10 arrested
இந்த நடவடிக்கையை பிரான்ஸின் பயங்கரவாத தடுப்புப்பிரிவு முன்னெடுத்தது. குறித்த நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த ஜூன் 14 ம் திகதி ஆரம்பமானது. கைது செய்யப்பட்டவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவாக எதையும் அறியமுடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் 96 மணிநேரங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
உள்துறை அமைச்சர் Gérard Collomb, DGSI படையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பயரங்கரவாதம் தொடர்பாக தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதற்கும், செயற்படுவதற்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
tags :- June 23 night raid 10 arrested
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- 10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!