முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.(mahinda amaraweera india)
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பத்தில் இந்தியா எம்மை ஆதரித்தது.
பின்னர், எதிராகச் செயற்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையே அதற்குக் காரணம்.
நாங்கள் இந்தியாவை எதிரியாக்கியிருக்கிறோம். இது முன்னைய அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு. இந்தியா போரின் போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் எமக்கு உதவியது.
ஆனால், பின்னர் எமக்கு எதிராகச் செயற்பட்டது. ஏனென்றால், அதற்குக் காரணம் எமது கொள்கைகள் தான்.
அதன் விளைவாக நாம் மீன் ஏற்றுமதி தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tags :- mahinda amaraweera india
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்