actress kausalya clarifies on her marriage rumours
தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கெளசல்யா.
அந்த படத்தில் முரளி ஜோடியாக நடித்ததிலேயே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார்.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்த கெளசல்யா, கடந்த வருடம் வெளியான ‘பிரம்மா டாட் காம்’ படத்தில் நகுலுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
தற்போதும் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் கெளசல்யாவுக்கு 38 வயதாகிறது.
இந்நிலையில், கெளசல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
ஆனால், இந்தச் செய்தியை அவர் மறுத்துள்ளார். ‘இப்போதைக்கு நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. வெளியான செய்தி பொய்யானது’ என்று தெரிவித்துள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
- அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!
- ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!
- எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!
- பக்கா : திரை விமர்சனம்..!
- பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!
- கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!
- அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!
**Tamil News Groups Websites**