பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

0
34

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

சித்திரை புத்தாண்டின் பின்னர் பாராளுமன்றம் முதல் தடவையாக இன்று (24) கூடியுள்ளது.

இன்றைய பாராளுமன்றத்தில் மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை,

(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

(ii) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

பின்னர் மு.ப. 10.30 – பி.ப. 5.30 வரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபறும்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று, நாளை (25) மற்றும் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.