கொழும்பில் பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரக்கிளை

0
35

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ சங்கராஜ விகாரையின் அரச மரக்கிளையே சற்றுமுன்னர் இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் லொறி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.

விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து காரணமாக அந்த இடத்தை சுற்றி தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.