பேருவளையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகர் உட்பட 11 பேர் கைது!

0
30

பேருவளை, பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட  வர்த்தகர்  உட்பட 11  பேரை பேருவளை பொலிஸார்  சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

பேருவளை , மருதானை பிரதேசத்தில் பேருவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல பிரதேசங்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இவருக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.