பேருவளை, பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகர் உட்பட 11 பேரை பேருவளை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
பேருவளை , மருதானை பிரதேசத்தில் பேருவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல பிரதேசங்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.