திகவாபி, வெஹெரகல பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
கைதானவர்கள் சம்மாந்துறை, கொக்கட்டிச்சோலை மற்றும் அம்பாறை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
சந்தேகநபர்கள் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.