எதிர்பார்க்க முடியாது அளவிற்கு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித்.. எவ்வளவு தெரியுமா

0
193

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

அர்ஜுன், திரிஷா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து ஆக்ஷன் காட்சியின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கினார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நடிக்கவுள்ளார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் நடிக்கப்போகும் படத்திற்காக தனது சம்பளத்தை ரூ. 200 கோடியாக உயர்த்திவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே Goat படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித்தும் தனது சம்பளத்தை ரூ. 200 கோடியாக உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.