நடிகை திரிஷாவை திருமணம் செய்யவிருந்த பிரபல தொழிலதிபர்.. தற்போது இந்த 37 வயது நடிகையை தான் காதலிக்கிறாரா

0
56

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, மோகன்லாலுடன் ராம் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். Goat படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் இருந்து திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதாகியும் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை திரிஷாவிற்கு வருண் மணியன் எனும் தொழிலதிபருடன் கடந்த 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்தது என தெரியவில்லை, திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்! திருமணமும் நின்றுபோனது.

இந்த நிலையில், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் மணியன் என்பவர் பிரபல நடிகை பிந்து மாதவியை டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்பட்டது. இதுகுறித்து நடிகை பிந்து மாதவி பேசுகையில், நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் என்று உறுதிப்படுத்தினாராம்.

மேலும் திரிஷாவை விட்டு வருண் பிரிந்த பின் தான் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். திரிஷாவுடன் அவர் உறவில் இருக்கும்போது, நான் அவரை டேட்டிங் செய்யவில்லை என்றும் கூறியுள்ளாராம். இது கடந்த ஆண்டு வந்த தகவல் என்றாலும் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.