‘அரண்மனை 4’ ரிலீஸ் திகதியில் மாற்றம்: மே 03 ஆம் திகதி உங்களை மிரட்ட வருகின்றது

0
45

இயக்குநர் சுந்தர் சியின் ‘அரண்மனை’ திகில் திரைப்படம் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமானது. திகிலுடன் சேர்ந்து நகைச்சுவையும் கலந்திருப்பதால் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில் தற்போது ‘அரண்மனை 4’ திரைப்பட ரிலீஸ் திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மே மாதம் 3ஆம் திகதி இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்துடன் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் என நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது.

அண்மையில் இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது. ட்ரெய்லரே இவ்வளவு மிரட்டலாக இருந்தால் திரைப்படம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என சிந்திக்க வைத்துள்ளது.