நான்கு ரயில் சேவைகள் ரத்து!

0
38

சமிக்ஞை கட்டமைப்பு செயற்பாட்டில் தடையேற்பட்டுள்ளமையினால் நான்கு  ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பிரதான பாதையின் புகையிரத பயணங்களும், களனிவெளி மார்க்கத்தின் புகையிரத பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான பாதையில் காலை 7.02 மணியளவில்  கொழும்பு – கோட்டையிலிருந்து  ராகம  வரையில் இயங்கும்  புகையிரதமும், காலை 7.30 மணியளவில்  ராகமவிலிருந்து கொழும்பு -கோட்டை வரை பயணிக்கும் புகையிரதமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 05.20 மணிக்கு  பாதுக்க நிலையத்திலிருந்து கொழும்பு -கோட்டை நோக்கி செல்லும் புகையிரதமும், கொழும்பு – கோட்டை நிலையத்திருந்து இரவு 07.15 மணிக்கு பாதுக்க நிலையம் நோக்கி பயணிக்கும் புகையிரதமும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.