கிழக்கு ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டும் தில்லுமுல்லு கல்வி அதிகாரி; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0
39

அதிகாரப்பசி, அடாவடித்தனம், பாரபட்சம், பழிவாங்கள், ஊழல், மோசடி, அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடிவருடுதல் போன்ற குணங்களை கொண்ட பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையாது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளரின் அடாவடி நடவடிக்கைகளாலும், முறைகேடான நடவடிக்கைகளாலும் கணிசமான அதிபர்கள் ஆசிரியாகள், பெற்றோர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

 அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய ஆளுனரின் அடிவருடியாக மாறுவதற்கு இவர் முயற்சித்தபோதும் அது பயனளிக்காத நிலையில் தனக்கு ஆதரவானவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில்  கிழக்கு  ஆளுநருக்கு எதிராக கல்வி அதிகாரி ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல தில்லுமுல்லுகளை செய்த பட்டிருப்பு கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவரது இடமாற்றத்திற்கு  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரை  இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து   ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளன.

குறித்த போராட்டமானது இன்று (19.04.2024) களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்கு முன்னால் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து, குறுகிய காலத்தில் வலயத்தை முன்னேற்றிய கல்விப் பணிப்பாளர் எமக்கு வேண்டும் போன்ற பல வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.