கொழும்பு செல்ல நீண்ட வரிசையில் நின்ற மக்கள்!

0
49

சித்திரை புத்தாண்டுக்காக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்திருந்தனர்.

இவர்கள் நேற்று (16) இன்று (17) கொழும்பு நோக்கி செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றும் இன்றும் கொழும்பு நோக்கி செல்பவர்களுக்குகாக விசேட பஸ் சேவைகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பஸ் டிப்போவின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்றை தினம் 49 பஸ்களும் இன்று 12 மணி வரை காலப்பகுதியில் 29 பஸ்களும் 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதகவும் வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ்கள் இன்றைய தினம் வருகை தராதமையினால் நீண்ட வரிசை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து பயணிகள் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்கள் வேலைக்கு செல்வதற்காக புதிய பஸ்கள் சேவைகள் ஈடுபடுத்தியிருப்பதாக தெரிவித்த போதிலும் போதிய அளவு பஸ்கள் இல்லாததன் காரணமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பிள்ளைகளுடன் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவித்தனர்.