வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பஸ் மோதி விபத்து ; சாரதி உட்பட 10 பேர் காயம்!

0
40

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் இ.போ.ச பஸ்  ஒன்று  மோதி இடம்பெற்ற விபத்தில் பஸ் நடத்துனர் உட்பட 10 பேர் காயமடைந்து பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான லொறி பொல்பிதிகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் குருணாகல் நோக்கி வேகமாகப் பயணித்த இ.போ.ச பஸ்  லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பஸ் நடத்துனர் மற்றும் நான்கு பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 பேர் பொல்பிதிகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.