மலேசியாவில் மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கையர்!

0
14

மலேசியா Batu pahat நகரில் மலேசியா வாழ் இலங்கையர்களின் புது வருட விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. குறித்த மரதன் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார்.

சிப்ரான் நப்லி சாஹிரா கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக் காலத்தில் 4 தடவை மரதன் போட்டியில் முதலிடம் மற்றும் நெடுந்தூர ஓட்ட சம்பியனாகவும் திகழ்ந்துள்ளார்.

மேலும் இவர் புத்தளம் Big bang சமூக அமைப்பின் அணியின் தலைவராகவும் மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.